சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவின் மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியான தமிழக தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 80 பேருக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி - 29 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

MK Stalin demands Rs. 25-lakh compensation for kin of Munnar lankslide victims

அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் - தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி - தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.

மூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்!மூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்!

தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து - உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் - மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Recommended Video

    Idukki Landslide: இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 17 தமிழர்கள்

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

    English summary
    DMK President MK Stalin has demanded that Tamilnadu Govt Should announce Rs. 25-lakh compensation for kin of Munnar lankslide victims.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X