ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக.. தந்தை வழியில் தனயன் ஸ்டாலின்!
சென்னை: நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என கருணாநிதி இந்திராகாந்திக்கு அழைப்பு விடுத்தார். அது போல் ஸ்டாலின் , ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை தொடர்ந்து ராயப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தபோது என் மனதில் ஒரு நினைவலைகள் ஓடியது. 1961-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றயது.
அப்போது ஜிம்கானா கிளப்பிற்கு பக்கத்தில் காமராஜர் சிலையை திறந்து வைத்தோம். அந்த சிலையை திறந்து வைத்தது பிரதமர் நேரு. இன்று 2018-இல் நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தியை கருணாநிதி சிலையை திறந்து வைத்துள்ளார்.

கனவு நனவு
இதனால் நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போய் இருக்கிறேன். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான நாள், ஏன் மறக்க முடியாத நாள் ஆகும். இன்று நீதி கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம். தந்தை பெரியாரின் கனவை நனவாக்கியிருக்கிறோம்.

50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி
ஒரு நாட்டினுடைய சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டால் பொருளாதாரம் சீரழிந்து விட்டால் அதனை சரி செய்வது சாதாரண காரியம் அல்ல. மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது. இன்னும் 50 ஆண்டுகள் இவரை ஆட்சி செய்ய விட்டுவிட்டால் இந்தியா 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிடும்.

பகிரங்கம்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுக்கு மோடி இரங்கல் தெரிவிக்கிறார். போர்ச்சுக்கல் நாட்டு காட்டுத் தீ குறித்து மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கிறார். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சையில் இறந்து போனவர்களுக்கு மோடி இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். மோடி சேடிஸ்ட் மனப்பாங்கோடு உள்ளார் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்.

மமதை மோடி
தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித் துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. சமூக நீதிக்கு மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. வேறு பாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். பரம்பரை மன்னர் என்ற மமதையுடன் மோடி ஆட்சி நடத்துகிறார்.

நல்லாட்சி
வேறுபாடற்ற சமூகம் ஏற்பட நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். இந்தியாவை காக்கக் கூடிய ஜனநாயகத்திற்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்றார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications