தொகுதி மறுவரையறையில் மிகப்பெரிய சதி.. பாயிண்டை பிடித்த ஸ்டாலின்.. பரபரப்பு பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மறுபக்கம் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் கொண்டு வரவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீரன் சின்னமலைக்கு நடைபெற்ற துரோகத்துடன் ஒப்பிட்டு இந்த பிரச்சனை குறித்து ஸ்டாலின் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று. அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!

ஆர்எஸ்எஸ் எஜமானர்களின் காலடியில்
இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள். அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே ஆர்எஸ்எஸ் எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.
இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக!" என்று கூறியுள்ளார். மேலும் #Delimitation #SayNoToNDA #VoteForDMK உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளையும் அந்தப் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பதிவை திமுகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications