7 தமிழர் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இதேபோல் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலானதுமான செயலாகும். 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

தேவை விரைவான முடிவு
இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க. அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கனிமொழி வலியுறுத்தல்
இதேபோல் திமுக எம்பி கனிமொழியும் தமது ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ராமதாஸ் ட்வீட்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுனரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்" என்ற உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

தவாக வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழரையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய எந்த ஜனநாயக குரலுக்கும் செவிசாய்க்காமல், தமிழக அமைச்சரவை தீர்மானத்தையும் கிடப்பில் போட்டுள்ளதோடு, பேரறிவாளன் அவர்களின் கருணை மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது ஆளுநர் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், ஆளுநரின் முடிவுக்கு காத்திராமல் அவர்களின் 30 ஆண்டுகால கொடுஞ் சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications