எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?.. முதல்வருக்கு ஸ்டாலின் நறுக் கேள்வி
சென்னை: எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகும் வகையில் மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதை சட்டமாக்க ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 40 நாட்களாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுகுறித்து எந்த பதிலையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

7.5% மசோதா
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஆளுநர் பதிலளிக்கையில், 7.5 சதவீத மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை.

கால அவகாசம்
3 முதல் 4 வாரங்கள் வரை கால அவகாசம் தேவை. இதையே என்னை சந்தித்த அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்ததாக ஆளுநர் பதிலளித்திருந்தார். ஏற்கெனவே 30 நாட்கள் மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு தற்போது மீண்டும் கால அவகாசம் கேட்பதா என கேட்டு இன்று ராஜ்பவன் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக தலைவர்
அதன்படி ராஜ்பவன் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏக்கள் துரைமுருகன், மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், எம்பி டி ஆர் பாலு, தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கால அவகாசம்
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினை திமுக அரசியல் செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவே இல்லை. ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காமல் விட்டாலும் நான் விட மாட்டேன். 40 நாட்களாக மசோதா மீது முடிவெடுக்காமல் இன்னும் காலஅவகாசம் கேட்பதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications