திடீர்னு வந்த போன்.. செம அப்செட்டான ஸ்டாலின்.. சைலண்ட்டாக முடிந்த "அந்த 6 தொகுதிகள்".. என்னாச்சு?
முக ஸ்டாலின், கொளத்தூரில் நிவாரணம் வழங்க இருந்தது தடை செய்யப்பட்டது
சென்னை: கொளத்தூர் உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு மெகா ஐடியா தீட்டியிருந்திருக்கிறார்.. ஆனால், திடீரென ஒரு போன் வந்து அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கி உள்ளது.. இதனால் முக ஸ்டாலின் அப்செட்டின் உச்சத்துக்கு சென்றதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.. வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகமே காத்து கொண்டுள்ளது.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நடந்து முடிந்துள்ளன.
இதற்கு நடுவில் ஏகப்பட்ட அனுமானங்கள், வியூகங்கள், கணிப்புகள், ஓடிக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்களையும் தமிழக மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

அலர்ட்
இந்நிலையில், எந்த கட்சி சார்பாகவும் சின்ன பிரச்சனை கூட வந்துவிடக்கூடாது என்று விழிப்பாக இருந்து வருகிறார்கள்.. அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அலர்ட்டாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியை பற்றியும், அந்த தொகுதியில் ஸ்டாலின் மேற்கொண்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஒரு செய்தி கசிந்து வருகிறது.

நிவாரண உதவிகள்
திடீரென சென்னையில் கொரொனா தொற்று அதிகமாகிவிடவும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு வீரியத்துடன் இறங்கியது.. அதுபோலவே, திமுக தரப்பும் முனைப்பு காட்டியது.. குறிப்பாக தன்னுடைய கொளத்தூர் தொகுதியில், முக ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

6 தொகுதிகள்
இதையடுத்து, கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர் போன்ற தொகுதிகளில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்க திமுக சார்பில் வழங்க ஏற்பாடானது.. இவைகளை கடந்த 9ஆம் தேதி நேரடியாக வந்து பொதுமக்களுக்கு வழங்கவும் ஸ்டாலின் பிளான் வைத்திருந்தாராம்.. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென ஒரு போன் வந்துவிட்டதாம்.

நிவாரண பொருட்கள்
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், இவைகளை விநியோகிக்கக்கூடாது என்று சிலர் சொல்லவும், ஸ்டாலின் அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது.. அதற்கு பிறகு வேறு வழியில்லாமல், நிவாரண பொருட்களை திமுக நிர்வாகிகளே மக்களுக்கு அமைதியாக தந்துவிட்டு சென்றார்களாம். ஒருவேளை இந்த பொருட்களை ஸ்டாலின் தந்திருந்தால், நிச்சயம் அது தொகுதியில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் என்கிறார்கள்..

உயர் அதிகாரிகள்
அதேபோல, இந்த பொருட்களை ஸ்டாலினே நேரடியாக சென்று விநியோகித்திருந்தால், அது கூடுதல் மவுசை தொகுதிகளில் ஏற்படுத்தியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். எப்படியோ, அந்த போனில் பேசியது சில உயர் அதிகாரிகள் என்கிறார்கள்.. அவர்கள்தான் ஸ்டாலினை அலர்ட் செய்ததாகவும் தெரிகிறது.. தற்போது, சில அரசு உயர் அதிகாரிகள் ஸ்டாலினுக்கு ரகசியமாக போன் போட்டு வாழ்த்து சொல்லி வருவதாக செய்திகள் கசிந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications