அதிமுக எம்எல்ஏ பிஏ பைக்குக்கே பாதுகாப்பில்லை.. சென்னையில்.. கோவில் முன்பே சுட்ட திருடர்கள்!
எம்எல்ஏ பி.ஏ.வின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
சென்னை: எம்எல்ஏவின் பி.ஏ வண்டியையே ஆட்டைய போட்டு விட்டார்கள் களவாணிகள். அதுவும் கோயிலுக்கு முன்னாடியே இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது.
அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் உதவியாளரின் செல்லகிருஷ்ணன். ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 7 மணி அளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மனைவி குழந்தைகளுடன் சென்றார்.

அவர்களை தன்னுடைய பைக்கில்தான் கூட்டி சென்றார். கோவிலின் பின்புறம் இருக்கும் குளக்கரை அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கோயிலுக்குள் சாமி கும்பிட சென்றார்.
சாமி தரிசனம் முடிந்து 8 மணி போல வெளியே வந்தார். வீட்டுக்கு செல்ல பைக்கை எடுக்க போனால், அங்கே நிறுத்தப்பட்டிருந்த பைக் காணவில்லை. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தார். அந்த பகுதி முழுக்க தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.
பரபரப்பான மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நிறுத்திவிட்டு போன பைக் காணாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பற்றி உடனடியாக மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் செல்லக்கிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார் பைக்கை திருடியவரையும், காணாமல் போன பைக்கையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications