எங்களுக்கும் கார்.. கோரஸாக கேட்ட எம்.எல்.ஏக்கள்.. அமைச்சரின் ‘தெறி’ ரிப்ளை.. முதல்வர் ஒரே சிரிப்பு!
சென்னை : மாவட்ட சேர்மன்கள் மற்றும் ஒன்றிய சேர்மன்களுக்கு கார் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்ததும், சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் கோரஸாக, "எங்களுக்கும் கார் வழங்கவேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
எம்.எல்.ஏக்கள் தங்களுக்கும் கார் கேட்டதால் ஷாக் ஆன அமைச்சர் ஐ.பெரியசாமி மனசு இருக்கு.. நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கு.. அதுக்கு யார் காரணம்னு எல்லோருக்கும் தெரியும் என்றார்.
அமைச்சர் சொன்ன பதிலைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களின் சிரிப்பலையால் சட்டப்பேரவை குலுங்கியது.

எம்.எல்.ஏக்களுக்கு கார்
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றும் விதமாக 244 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 388 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு வழங்க Scorpio Classic கார் வாங்கப்பட்டுள்ளது. 19 மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு TATA SAFARI கார் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். முதலமைச்சருக்கு எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள்.. நிதி மட்டும் இருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வார். இது அனைவருக்குமான அரசு என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

அமைச்சர் பதிலால் சிரிப்பலை
அப்போது அவையில் இருந்த எம்.எல்.ஏக்கள் கோரஸாக, எங்களுக்கும் கார் கொடுங்க எனக் கேட்டனர். இதனால் ஷாக் ஆகி பின்னர் சுதாரித்துக்கொண்டு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, மனது கடலை போல விரிந்திருக்கிறது. நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கிறது. அதற்கு யார் காரணம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினார். அமைச்சரின் பதிலைக் கேட்டு அவையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் சிரித்தனர்.

புதிய அறிவிப்புகள்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி. ரூ.30 கோடி மதிப்பீட்டில் மலைப் பகுதிகளில் சிறப்புத் திட்டம். ரூ. 69 கோடியில் ஊராட்சிகளுக்கான கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண் வசதிகள் அருகிலுள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்ற அறிவ்ப்புகளை வெளியிட்டார்.

தூய்மை காவலர்களுக்கு
மேலும், ஊரகப் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூ.275 கோடி மதிப்பீட்டில் நடப்படும். ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும். 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications