ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மநீம பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது.. ஜாமீனில் விடுவிப்பு!
சென்னை: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ். இவர், கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று தனது தோழியுடன் சைதாப்பேட்டையில் இருந்து மாநிலக் கல்லூரி செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்திருந்தார். ஆட்டோ ஆழ்வார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது கூகுள் மேப்பை ஆப் செய்து ஓட்டுநர் தாறுமாறாக பள்ளம், மேடுகளில் விட்டு ஓட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் சினேகா மோகன் ஆட்டோ ஓட்டுநரை மெதுவாக செல்லுமாறும், சரியான வழியில் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கும், சினேகா மோகன்தாஸூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாந்தோம் அருகே ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் சினேகா மோகன்தாஸை ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
உடனடியாக ஆட்டோவில் இருந்த சாவியை எடுத்த சினேகா மோகன்தாஸ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநரும், சினேகா மோகன்தாஸூம் மாறி மாறி அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் தடுத்தனர். பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த தகராறு குறித்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆட்டோ ஓட்டுநர் சினேகா மோகன்தாஸை தாக்குவதும், பதிலுக்கு சினேகா மோகன் தனது செருப்பை கழட்டி ஆட்டோ ஓட்டுநரை அடிப்பதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.
காவல் நிலையம் அழைத்து சென்று இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் சினேகா மோகன்தாஸுக்கு காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து வைத்து ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் மீது ஆபாசமாக பேசுதல், அடித்தல், பெண்ணை இழிவு செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மநீம பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரான சினேகா மோகன்தாஸை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
-
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க












Click it and Unblock the Notifications