குடியுரிமை சட்டத்துக்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல்ஹாசன்
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிச.23-ல் திமுக நடத்த இருக்கும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிச.23-ல் பிரமாண்ட பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டிசம்பர் 23-ந் தேதி பேரணியில் 11 கட்சிகள் பங்கேற்கும். அரசியலைக் கடந்து பொதுமக்களும் அனைத்து இயக்கங்களும் இதில் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அனைத்து கட்சி கூட்டம் குறித்து தம்முடன் பேசியதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக ஒருங்கிணைக்கும் சென்னை பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 2-வது நாளாக போராடும் மாணவர்களை சந்தித்தார் கமல்ஹாசன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் சென்னை பேரணியில் தங்களது கட்சியும் பங்கேற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications