டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு
சென்னை: டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள ஆங்கிலத்திலான பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி, கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
Thousands of poor farmers from across India are marching in Delhi seeking debt relief & better MSP. Tamil Nadu farmers are facing the same plight.
— M.K.Stalin (@mkstalin) November 30, 2018
I urge PM @narendramodi to listen to the pain of these farmers and work towards long term solutions.#FarmersMarch#KisanMarch pic.twitter.com/o5PoOGuNko
தமிழ்நாடு விவசாயிகளும் இதேபோன்ற இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். எனவே, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவசாயிகளின் வேதனை குரலை கேட்க வேண்டும். நீண்டகால தீர்வை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications