கீரிப்பிள்ளையை ஏன் பாம்பால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.. அசாத்தியமான வேட்டைத்திறன் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சா நெஞ்சன் என்று அழைக்கும் அளவிற்கு கீரிப்பிள்ளை ஆச்சரியமானது! . எவ்வளவு பெரிய ராஜநாகமாக இருந்தாலும், அதன் முன்னால் மரண பயமே இல்லாமல் கீரிப்பிள்ளை கெத்தாக நிற்கும். விஷப் பாம்புகளை, குறிப்பாக நாகப்பாம்புகளை வேட்டையாடுவதில் கீரிப்பிள்ளை ஒரு "சூப்பர் ஹீரோ" போல் செயல்படுவதற்குப் பின்னால் இருக்கும் அசாத்தியமான அறிவியல் மற்றும் இயற்கை ரகசியங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

சமூக வலைதளத்தில் பார்க்கும் போது, ஒரே நொடியில் நாகப்பாம்பை கிரிப்பிள்ளை லாவகமாக கடித்து காலி செய்தது..இது எப்படி நடந்தது என்று ஆய்வு செய்த போது பல உண்மைகள் தெரியவந்தது. இதுபற்றி பார்ப்போம்.

Mongoose vs Cobra The Secrets Behind the Ultimate Venomous Predator Killer

மின்னல் வேகம் மற்றும் சுறுசுறுப்பு

பாம்பை விட கீரிப்பிள்ளையின் அசைவுகள் மற்றும் எதிர்வினை வேகம் மிக மிக அதிகம் ஆகும். எனவே பாம்பு கடிக்க வரும்போது, கீரிப்பிள்ளை மின்னல் வேகத்தில் பக்கவாட்டில் நகர்ந்து அதை ஏமாற்றிவிடுகிறது. அத்துடன் பாம்பைக் களைப்படையச் செய்வதே அதன் முதல் உத்தி. தொடர்ந்து தாக்கித் தாக்கிப் பாம்பு சோர்வடைந்தவுடன், அதன் தலையைக் கவ்விப் பிடித்துவிடுகிறது.

இயற்கை தந்த "ஆண்டிடோட்"

கீரிப்பிள்ளைக்குப் பாம்பின் விஷத்தை எதிர்க்கும் ஒரு அற்புதமான உடலமைப்பு இருக்கிறது. அதன் உடலில் உள்ள நிகோடினிக் அசிடைல்கொலின் ஏற்பிகள் மரபணு ரீதியாக மாற்றமடைந்துள்ளன. பொதுவாகப் நாகப்பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி முடக்கும். ஆனால், கீரிப்பிள்ளையின் உடலில் இந்த விஷ மூலக்கூறுகளால் ஒட்டிக்கொள்ள முடியாது.

இதனால்தான் பாம்பின் விஷம் கீரிப்பிள்ளையை எளிதில் பாதிப்பதில்லை. இருப்பினும், ஒரு பெரிய பாம்பு தொடர்ந்து பலமுறை கடித்தால் கீரிப்பிள்ளையும் மயங்கவோ அல்லது இறக்கவோ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பொதுவாகவே கிரிப்பிள்ளை பாம்பைக் கடிக்க விடுவதே இல்லை.

தடிமனான ரோமங்கள்

கீரிப்பிள்ளையின் உடல் முழுவதும் அடர்த்தியான, தடிமனான ரோமங்கள் உள்ளன. பாம்பு கடிக்கப் பாயும்போது, அதன் விஷப் பற்கள் கீரியின் தோலைத் தொடுவதற்கு இந்த அடர்ந்த ரோமங்கள் ஒரு கேடயம் போல தடுத்து விடும். அதேபோல் கீரிப்பிள்ளைக்குப் பாம்பின் பலவீனம் நன்றாகத் தெரியும். பாம்பின் வால் பகுதியையோ அல்லது உடலையோ கடித்து அது நேரத்தை வீணாக்குவதில்லை. பாம்பைக் கோபமூட்டி, அது சோர்வடையும் வரை காத்திருந்து, மிகச் சரியான தருணத்தில் பாம்பின் மண்டையோட்டை நோக்கியே தன் கூர்மையான பற்களால் தாக்கும். ஒரே கடியில் பாம்பின் கபாலத்தை உடைத்துவிடும்.

"எதிர்ப்பு சக்தி" (Antibodies) வேறு, "உடலமைப்பு" வேறு

பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்க நமக்கு விஷத்தை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் தேவை. தற்போது நாம் குதிரைகளின் உடலில் குறைந்த அளவு விஷத்தைச் செலுத்தி, அதன் மூலம் குதிரை உருவாக்கும் ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து மருந்து தயாரிக்கிறோம். குதிரையின் நோய் எதிர்ப்பு மண்டலம் விஷத்தை ஒரு எதிரியாகப் பார்த்து, அதை அழிக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

கீரிப்பிள்ளையின் முறை

கீரிப்பிள்ளையின் ரத்தத்தில் விஷத்தை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் பெரிய அளவில் சுரப்பதில்லை. மாறாக, அதன் நரம்பு மண்டலத்தில் உள்ள அசிடைல்கொலின் ஏற்பிகள் இயற்கையிலேயே சற்று மாறுபட்ட வடிவத்தில் உள்ளன. அதாவது, பாம்பின் விஷம் கீரியின் நரம்புகளில் ஒட்டவே முடியாது. குதிரையின் உடலில் விஷம் வேலை செய்யும், ஆனால் குதிரை அதற்கு எதிராக "ஆண்டிபாயடிக்கை" திரட்டுகிறது. கீரிப்பிள்ளையின் உடலோ விஷம் நுழைய முடியாத ஒரு "பூட்டிய கோட்டை" போன்றது. கோட்டைக்குள் நுழைய முடியாத விஷத்திற்கு எதிராக அது ஆண்டிபாயடிக்கை உருவாக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, அதிலிருந்து நம்மால் ஆன்டிபாடிகளை எடுக்க முடியாது.

கீரிப்பிள்ளையின் இந்த மரபணு சார்ந்த நரம்பமைப்புப் பாதுகாப்பை மனிதர்களுக்குத் தடுப்பூசியாக மாற்ற முடியாது. மனிதர்களின் நரம்பு ஏற்பிகளை கீரிப்பிள்ளையைப் போல மாற்ற வேண்டும் என்றால், அது மனிதனின் டிஎன்ஏ-வை மாற்றுவது போலாகிவிடும். இது மருத்துவ ரீதியாகச் சாத்தியமற்றது, ஆபத்தானது. ஒரு மனிதனைக் காப்பாற்றத் தேவைப்படும் ஆன்டிவெனம் மருந்தை தயாரிக்க அதிக அளவு ரத்தப் பிளாஸ்மா தேவை. குதிரைகள் பெரிய விலங்கு என்பதால், அவற்றின் உயிருக்கு ஆபத்தில்லாமல் அதிக அளவு ரத்தத்தை எடுத்து மருந்து தயாரிக்க முடிகிறது. ஆனால், சிறிய கீரிப்பிள்ளைகளிடம் இருந்து அந்த அளவுக்கு ரத்தத்தை எடுக்க முடியாது.

தற்போதைய நவீன ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

கீரிப்பிள்ளையை நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும், விஞ்ஞானிகள் அதன் உடலமைப்பை ஆராய்ந்து வருகிறார்கள். கீரியின் நரம்பு ஏற்பிகள் எப்படி விஷத்தை வழுக்க விடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, அதே போன்ற வேதியியல் அமைப்பில் செயற்கை மூலக்கூறுகளை ஆய்வகங்களில் உருவாக்க முயற்சிக்கின்றன "செயற்கை ஆன்டிவெனம்" தயாரிக்கப்படவும் எதிர்க்காலத்தில் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+