அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன?
அதிமுக செயற்குழு பலத்த எதிர்ப்பார்ப்புடன் தொடங்கிய நிலையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒற்றை வாக்கில் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். இருவர் தேர்வையும் பொதுக்குழு விதி மூலம் மாற்ற முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மோதலுடன் முடிவடைந்த நிலையில் இன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒற்றை வாக்கு முறையில் தேர்வு
கட்சியின் சட்ட விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றைவாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அடிப்படை விதிகளில் மாற்றம்
கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வர், கட்சியின் திட்ட விதிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுகவின் விதி என் 20 பிரிவு 2 , விதி எண்45, 40 உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

3 சட்ட விதிகளில் மாற்றம் என்னென்ன? சிறப்புத் தீரமானம் என்ன சொல்கிறது?
அதிமுக செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட 3 வது சிறப்புத் தீர்மானம் கே.பி.முனுசாமியால் முன் மொழியப்பட்டது.
சிறப்புத் தீர்மானம் அதிமுக சட்டதிட்ட விதி முறைகளில் செய்யப்படும் மாற்றங்களும் திருத்தங்களும்.

முன்னர் இருந்த விதி 20
செயற்குழு ஏகமனதாகத் ஒப்புதலைப் பெற்று ஏற்றுக் கொள்ளப்படுதல் அமலில் உள்ள சட்ட விதிமுறைகள் விதி 20 ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தற்போது திருத்தம் விதி 20 பிரிவு 2
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்குகளின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்.

முன்னர் இருந்த விதி 43
விதி 43 திருத்தம் கட்சி சட்ட விதிமுறைகளை ஏற்றமும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகவும் மாற்றப்பட்ட விதி கட்சியின் சட்ட விதிகளை ஏற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும்.

திருத்தப்பட்ட விதி
கட்சி சட்ட விதிமுறைகளை ஏற்றமும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகவும் மாற்றப்பட்ட விதி கட்சியின் சட்ட விதிகளை ஏற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும். "ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.''

திருத்தத்துக்கு முன் சட்ட விதி 45
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் :-
மேலே கூறப்பட்டுள்ள சட்ட திட்ட விதிகளில் எந்த விதியைத் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு.

திருத்தப்பட்ட விதி 45
கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்அதிகாரம் :-
மேலே கூறப்பட்டுள்ள சட்ட திட்ட விதிகளில் எந்த விதியையும் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. "ஆனால்,இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும், விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.''
Recommended Video

வானளாவிய அதிகாரம் பெற்ற இருபதவிகள்
இவ்வாறு சிறப்புத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியில் மிகுந்த அதிகாரம் பெற்றவர்களாகவும், பொதுக்குழுவால்கூட மாற்றப்பட முடியாத தலைவர்களாகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் இனி இருப்பர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக்குழு கூட்டி மாற்றவோ, அதிகாரத்தை குறைக்கவோ முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இதை பொதுக்குழுவில் வைத்து இறுதிப்படுத்த வேண்டும்.
-
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை












Click it and Unblock the Notifications