Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் திட்டம்.. முதலமைச்சரின் காலை உணவு.. ஊரக பகுதியில் விரிவாக்கம்.. ஸ்டாலின் அன்றே சொன்னாரே, செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அடுத்தக்கட்ட விரிவடைய உள்ளது.. இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டது... இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Morning Breakfast Scheme program to be expanded in Tamil Nadu and whats the New Order for School teachers

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்தது தெரியவந்தது. அதனால்தான், இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்தார்.. பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணி தீவிரமானது.

கருணாநிதி: இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு, மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்திருந்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

உணவுத்திட்டம்: இந்நிலையில், தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

அதாவது, தமிழகத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 2. 50 லட்சம் மாணவர்களுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பானது செயல்வடிவம் பெற்றுள்ளது.

மகிழ்ச்சி: இந்த திட்டத்திற்காக தனியாக உணவுப் பொருட்களை வைக்க, சமையல் செய்ய, தேவையான இட வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் திட்டத்தை செயல்படுத்த, முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்களாம். இதையடுத்து, ஊரகப்பகுதிகளிலும் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் ஆரம்பமாகியிருப்பது பெரு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+