சென்னை மக்களுக்காக 'செம திட்டம்'! பறந்து பறந்து கொசுக்களை ஒழிக்கும் ட்ரோன்கள்! மாநகராட்சி அசத்தல்
கொசு ஒழிப்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நவீன முன்னெடுப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் ட்ரோன் இயந்திரங்களை கொண்டு கொசுக்களை ஒழிப்பதற்கான புதிய முயற்சியை தொடங்கி வைத்துள்ளார் மேயர் ப்ரியா ராஜன்.
குறிப்பாக கழிவு நீர் கால்வாய்கள், குப்பை கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் கொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த ட்ரோன் மிகுந்த உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலத்திற்கேற்ப நவீன முறையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கவனம் ஈர்த்திருக்கிறது.

கொசுவால் நோய்கள்
கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால், என பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கொசுக்களை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சியானது கொசுக்களை அடியோடு ஒழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய்
கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகக்கூடிய குப்பை கிடங்குகள், கழிவு நீர் கால்வாய்கள், உள்ளிட்டவற்றில் ட்ரோன் இயந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளித்து கொசுக்களை ஒழிப்பதற்கான முன்னெடுப்பை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. சென்னை ஓட்டேரியில் உள்ள நல்லா கால்வாயில் இந்த புதிய முயற்சியை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தொடங்கி வைத்தார் மேயர் ப்ரியா ராஜன்.

ஒருவர் போதும்
இந்த ட்ரோன் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒருவரே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நல்ல முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டமானது அடுத்தடுத்து தமிழகமெங்கும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு இந்த ட்ரோன் இயந்திரங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் போதும்
இந்த ட்ரோன் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒருவரே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நல்ல முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டமானது அடுத்தடுத்து தமிழகமெங்கும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு இந்த ட்ரோன் இயந்திரங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒருவரே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நல்ல முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டமானது அடுத்தடுத்து தமிழகமெங்கும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு இந்த ட்ரோன் இயந்திரங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன முறை
காலத்திற்கேற்ப நவீன முறையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கவனம் ஈர்த்திருக்கிறது.இனி வரும் நாட்களில் சென்னை முழுவதும் குறிப்பாக கூவம் கரையோரங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் முன்னெடுகப்படும் எனத் தெரிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications