தாய் பத்திரம்.. மூலப்பத்திரம் மட்டும் போதுமே.. போலி பத்திரத்தை ஆன்லைனிலேயே கண்டுபிடிக்கலாம்.. பாருங்க
சென்னை: நாளுக்கு நாள் போலி பத்திரங்களை பயன்படுத்தி, மோசடிகள் பெருகிவரும் நிலையில், இவைகளை எளிதில் அடையாளம் காணுவது எப்படி தெரியுமா?
சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்கள் போலவே உருவாக்கி மோசடிகள் நடக்கின்றன. இதற்காகவே, புதிய நடைமுறை ஒன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

போலி பத்திரங்கள்: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்த நிலையில், இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா, சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது..
அதேபோல, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
காரணம், சில இடங்களில் காலி நிலம் என்று சொல்லி, கட்டிடத்தை மறைத்து, பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால்தான், காலி நிலங்களின் புகைப்படத்தை பத்திரத்தில் இணைக்க வேண்டும் என்றும், காலி நிலம் மட்டுமல்லாமல், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
எப்படி கண்டறிவது: எனினும், மோசடிகள் தொடரும்பட்சத்தில், போலி பத்திரங்களை எவ்வாறு அடையாளம் காணுவது தெரியுமா? பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை பயன்படுத்தி, சொத்து பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே, போலியை கண்டுபிடிக்கலாம்..
அதேபோல, முத்திரைத்தாள் வாங்கிய தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின் பக்கத்தில், தெரிவிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் போன்றவற்றின் வித்தியாசங்களை வைத்தும் போலி பத்திரங்களை அடையாளம் காண முடியும். சொத்தின் மூலப்பத்திரங்கள் அதாவது தாய் பத்திரங்களை வைத்தும் ஓரளவு போலிகளை கண்டுபிடிக்கலாம்.
ஆன்லைன் முகவரி: இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஆன்லைன் மூலமாகவும், உங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.. http://ecview.tnreginet.net/ என்ற இந்த முகவரியை பயன்படுத்தி, உங்கள் நிலத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதள முகவரியில், சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் ஆகிய 3 தகவல்களையும் பிழையின்றி பதிவு செய்தால் பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.. அப்போது, அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது? உங்களது நிலம் உங்கள் பெயரில் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் நேரடியாகவே அறிந்து கொள்ளலாம். https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html?lan=ta
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications