தாய் பத்திரம்.. மூலப்பத்திரம் மட்டும் போதுமே.. போலி பத்திரத்தை ஆன்லைனிலேயே கண்டுபிடிக்கலாம்.. பாருங்க
சென்னை: நாளுக்கு நாள் போலி பத்திரங்களை பயன்படுத்தி, மோசடிகள் பெருகிவரும் நிலையில், இவைகளை எளிதில் அடையாளம் காணுவது எப்படி தெரியுமா?
சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்கள் போலவே உருவாக்கி மோசடிகள் நடக்கின்றன. இதற்காகவே, புதிய நடைமுறை ஒன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

போலி பத்திரங்கள்: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்த நிலையில், இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா, சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது..
அதேபோல, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
காரணம், சில இடங்களில் காலி நிலம் என்று சொல்லி, கட்டிடத்தை மறைத்து, பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால்தான், காலி நிலங்களின் புகைப்படத்தை பத்திரத்தில் இணைக்க வேண்டும் என்றும், காலி நிலம் மட்டுமல்லாமல், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
எப்படி கண்டறிவது: எனினும், மோசடிகள் தொடரும்பட்சத்தில், போலி பத்திரங்களை எவ்வாறு அடையாளம் காணுவது தெரியுமா? பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை பயன்படுத்தி, சொத்து பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே, போலியை கண்டுபிடிக்கலாம்..
அதேபோல, முத்திரைத்தாள் வாங்கிய தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின் பக்கத்தில், தெரிவிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் போன்றவற்றின் வித்தியாசங்களை வைத்தும் போலி பத்திரங்களை அடையாளம் காண முடியும். சொத்தின் மூலப்பத்திரங்கள் அதாவது தாய் பத்திரங்களை வைத்தும் ஓரளவு போலிகளை கண்டுபிடிக்கலாம்.
ஆன்லைன் முகவரி: இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஆன்லைன் மூலமாகவும், உங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.. http://ecview.tnreginet.net/ என்ற இந்த முகவரியை பயன்படுத்தி, உங்கள் நிலத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதள முகவரியில், சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் ஆகிய 3 தகவல்களையும் பிழையின்றி பதிவு செய்தால் பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.. அப்போது, அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது? உங்களது நிலம் உங்கள் பெயரில் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் நேரடியாகவே அறிந்து கொள்ளலாம். https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html?lan=ta
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications