தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாக கூட்டணி.. கனிமொழி குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாகவே கூட்டணி வைத்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்
சென்னை: தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாகவே கூட்டணி வைத்திருப்பது போல அதன் செயல்பாடுகள் உள்ளதாக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுக எம்பி கனிமொழி சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஏனென்றால், திமுக கூட்டணி வெளிப்படையாக எல்லோருக்குமே தெரிந்த கூட்டணிதான். யாரை எதிர்க்கிறோமோ அவர்களுடனேயே கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
ஆனால் தேர்தல் ஆணையத்துடன் பாஜக ரகசியமாக கூட்டணி என்பதைவிட வெளிப்படையாகவே தெரியக்கூடிய வகையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன. தேர்தல் ஆணையம் மட்டுமில்லை.. மற்ற அரசு துறைகள் எல்லாமே பாஜக சொல்கிறபடி இயங்குகின்ற சூழ்நிலையும், கட்டாயமும் நாட்டில் இருக்கிறது.
சபாநாயகர் மீது திமுக தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் அவருக்கு கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications