செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கவில்லை.. ரசிகர்களை ஏமாற்றிய தோனி.. சென்னை வருகை ரத்து!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடுகள் பற்றியும் சர்வதேச நாடுகளின் செஸ் வீரர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இறுதி நாள்
இதில் இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 6 அணிகள் விளையாடின. இதில் 3 ஆண்கள் அணிகளும், 3 பெண்கள் பெண்கள் அணிகளும் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. இன்று காலை இறுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இருக்கின்றன.

இந்திய அணி
11 சுற்றுகளில் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் அணியே செஸ் ஒலிம்பியாட் பட்டத்தை வெல்லும். நேற்று 10 வது சுற்று போட்டிகள் நடந்து முடிந்து இருக்கின்றனர். இந்திய பி அணியில் விளையாடிய தமிழ்நாடு வீரர் குகேஷ் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றிபெற்றும், ஒரு போட்டியில் சமனும், ஒரு போட்டியில் தோல்வியும் தழுவினார்.

10 வது சுற்று
நேற்று நடைபெற்ற 10 வது சுற்று போட்டியில் இந்திய பி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் நோடிர்பெக்குடன் மோதிய குகேஷ், 72 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, சிண்டாரோவ் என்ற வீரரை எதிர்கொண்டார். அதில், 77 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று உள்ளார். நிஹல், அந்திபன் ஆகிய 2 இந்திய வீரர்கள் சமன் செய்துள்ளார்கள்.

தோனி பங்கேற்கவில்லை
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இடம்பெற்ற நிலையில், திடீரென தோனி இதில் பங்கேற்க மாட்டார் என்று திடீரென தகவல் வெளியானது. தோனி இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து கிளம்புவது தாமதமானதால், அவர் சென்னை வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.
-
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்? -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications