பட்டினியால் செத்ததும்.. குடோன்கள் கொள்ளாமல் கோதுமையை விளைவித்ததும் ஒரே நாடா? பின்னணியில் ஒரு தமிழர்!
சென்னை: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். நாட்டு மக்கள் பட்டினியால் கொத்துக் கொத்தாக மாண்ட காலத்தில், துயர் பொறுக்காமல் வேளாண் ஆராய்ச்சித் துறையில் கால் பதித்த தமிழரான எம்.எஸ்.சுவாமிநாதன், நாட்டு மக்களைக் கொன்றொழித்த பஞ்சத்தை நாட்டை விட்டே விரட்டுவதில் பெரும் பங்கு ஆற்றியவர்.
தந்தை மருத்துவர் : எம்.எஸ்.சுவாமிநாதன் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்தபோது, 1940களில் ஏற்பட்ட வங்க பஞ்சத்தால் கொத்துக் கொத்தாக மக்கள் சாவதை அறிந்த சுவாமிநாதன், குடும்பத்தினரின் மருத்துவர் கனவை தள்ளி வைத்துவிட்டு விவசாயப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். தந்தை நடத்திய மருத்துவமனையை ஏற்று நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன், நாட்டின் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக வேளாண் ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்தியாவில் பெரும் பஞ்சம்: வேளாண் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போதுதான் 1960-களில் இந்தியாவில் மழை பொய்த்துப் போய் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பீகார், பஞ்சாப் மாநிலங்கள் கடுமையான பஞ்சத்தின் பிடியில் சிக்கின. எந்த அளவுக்குப் பஞ்சம் என்றால், அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திய மக்கள் வாரத்தில் ஒரு நாள் இரவு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும், என்று ஹோட்டல்களை மூட உத்தரவிட்டார்.
பஞ்சம் பசி பட்டினியை தவிர்க்க அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. நாள் முழுவதும் அமெரிக்காவில் இருந்து கோதுமையுடன் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பின்னர் லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமர் ஆனார். வியட்நாம் மீது அமெரிக்கா குண்டு வீசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததால், கோபம் கொண்ட அமெரிக்கா, இந்தியாவிற்கான கோதுமை ஏற்றுமதியை குறைத்து, ஒரு கட்டத்தில் முழுமையாக நிறுத்தியது.
கேலி செய்த உலக நாடுகள்: கோதுமைக்காக அமெரிக்காவை நம்பி இருந்த இந்திய மக்கள் அச்சமடைந்தனர். இந்தியாவில் பஞ்சம் மீண்டும் தலைதூக்கியது. உலக நாடுகள் இந்தியாவின் நிலையைப் பரிகசித்தன. 1966ல் உணவு தானிய உற்பத்தி பெருக்கத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் பசுமைப் புரட்சி திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டினர்.
பின்னாளில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நார்மன் போர்லாக் கண்டுபிடித்த மெக்ஸிகன் குட்டை ரக கோதுமை மூலம் கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெறலாம் என நினைத்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரை இந்தியாவிற்கு வரவழைத்து மெக்ஸிகன் கோதுமையை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஆலோசனை பெற்றார். இந்தியா கோதுமை விதையை இறக்குமதி செய்து பயிரிட்டது. கோதுமை சாகுபடியில் பெரும் வெற்றி பெற்றார் சுவாமிநாதன்.
கோதுமைப் புரட்சி: புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், டபுள் மடங்கு லாபத்தையும் சாதித்துக் காட்டினார் எம்.எஸ்.சுவாமிநாதன். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி. சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். இந்திய-ஜப்பான் கலப்பின அரிசியை உருவாக்கினார். அவரது அயராத உழைப்பால் இந்தியா உணவு உற்பத்தியில் படிப்படையாக முன்னேறி தன்னிறைவு பெற்றது.
குடோன்கள் கொள்ளவில்லை: பட்டினி கிடந்த நாட்டில், கோதுமையை சேமித்து வைக்க இடமின்றி பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் முழுக்க கோதுமை குடோன்களாக மாறும் நிலை ஏற்பட்டது. 'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' எனக் கூறும் எம்.எஸ்.சுவாமிநாதன் நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி 1970களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியை, உள்நாட்டின் தேவையை விட அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார்.
பஞ்சத்தாலும், பட்டினியாலும் சக மனிதர்கள் வயிறு வற்றி, துள்ளத் துடிக்க மாண்ட துயரம் கண்டு வெதும்பி, வேளாண் ஆராய்ச்சித் துறையை தேர்ந்தெடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன், தனது இறுதிக்காலம் வரை வேளாண் ஆராய்ச்சிகளுக்கும், விவசாய பயிர் உற்பத்தி முறைகளில் புதுமைகளைப் புதுத்துவதற்காகவுமே செலவிட்டார். எம்.எஸ்.சுவாமிநாதனின் விவசாயப் புரட்சி என்றென்றும் போற்றுதலுக்குரியது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications