இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு.. யார் இவர்? விவரம்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். 101 உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் என மொத்தம் 110 பேர் ஒருமனதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியனை தேர்வு செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான மாநில பொதுக் கூட்டம் இன்று சென்னை சூளைமேட்டில் காலை முதலே நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை முத்தரசன் மாநில செயலாளராக பதவி வகித்து இருந்துவிட்டதால், புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும். இதில் 3 முறை தொடர்ந்து முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர். 101 உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் என மொத்தம் 110 பேர் ஒருமனதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியனை தேர்வு செய்தனர்.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை அமைப்பான, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2018 அம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார்.
1979 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த மு. வீரபாண்டியன் பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்களில் பங்கேற்றார். கட்சியின் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த வீரபாண்டியன் தற்போது மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications