முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு...சிங்கள இனவெறியின் இழிசெயல் - திருமாவளவன் கண்டனம்
யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.
சென்னை: யாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் நிகழ்ந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நினைவிடம் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே - சீமான் கொதிப்பு
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 8, 2021
சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக க் கண்டிக்கிறது.
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம்.
தமிழர் அடையாளம் காப்போம். pic.twitter.com/6bjv97lD8O
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம் என்றும் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.