அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்களில் அரசு வழக்கறிஞரின் சான்றொப்பம் கட்டாயம்: முருகானந்தம் சரவெடி
சென்னை: கோர்ட்டில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்.
அரசு தலைமைச் செயலர் என்.முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:

ஹைகோர்ட்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்குக்கு தேவையான பிற ஆவணங்களில் சென்னை உயர் நீதிமன்ற ரிட் விதி 9-ன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அல்லது நோட்டரி மற்றும் சான்று உறுதி ஆணையர்கள் மூலமாக சான்றொப்பம் பெற வேண்டும்.
ஆனால் அரசு சார்ந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்களில் வழக்குகளில் எதிர்மனுதாரர்களாக இருக்கும் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுமே சான்றொப்பம் செய்து தாக்கல் செய்யும் நடைமுறை நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சான்றொப்பம்: ஆனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் தலைமையிலான அமர்வு, அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களிலும் ரிட் விதி 9-ன் பிரகாரம் தேவையான சான்றொப்பம் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மாநில அரசு ப்ளீடர் வாயிலாக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
எனவே இனி உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குகளில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள், வழக்குத் தொடர்பான ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடமே சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பமிடும் அரசு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக இருக்கக் கூடாது.
முத்திரைகள்: மேலும் சான்றொப்பமிடும் அரசு வழக்கறிஞர்கள் தங்களது கையெழுத்துடன், அவர்களது பெயர், முத்திரை, பதிவு எண், பதிவு செய்துள்ள பார் கவுன்சில், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்டும். எனவே இதற்கு தேவையான ஏற்பாடுகளை உயர் நீதிமன்ற மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications