Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்களில் அரசு வழக்கறிஞரின் சான்றொப்பம் கட்டாயம்: முருகானந்தம் சரவெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோர்ட்டில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடம் சான்​றொப்பம் பெறுவது கட்டாயம் என்று தலைமைச் செயலாளர் உத்தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்.

அரசு தலைமைச் செயலர் என்.​முரு​கானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு சுற்​றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:

muruganandam ias tn chief secretary government lawyers

ஹைகோர்ட்: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​யப்​படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்​குக்கு தேவையான பிற ஆவணங்​களில் சென்னை உயர் நீதி​மன்ற ரிட் விதி 9-ன் பிரகாரம் சம்பந்​தப்​பட்ட வழக்​கறிஞர் அல்லது நோட்டரி மற்றும் சான்று உறுதி ஆணையர்கள் மூலமாக சான்​றொப்பம் பெற வேண்​டும்.

ஆனால் அரசு சார்ந்த வழக்​கு​களில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்​களில் வழக்​கு​களில் எதிர்​மனு​தா​ரர்​களாக இருக்​கும் அதிகாரி​களும், சம்பந்​தப்​பட்ட துறை அதிகாரி​களுமே சான்​றொப்பம் செய்து தாக்கல் செய்​யும் நடைமுறை நீண்​ட​காலமாக பின்​பற்​றப்​பட்டு வருகிறது.

சான்றொப்பம்: ஆனால் சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம் தலைமையிலான அமர்வு, அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் மனுக்​களி​லும் ரிட் விதி 9-ன் பிரகாரம் தேவையான சான்​றொப்பம் கட்டாயம் இடம்​பெற்றிருக்க வேண்​டும் என்றும், இதுதொடர்பாக அரசு தகுந்த உத்தரவு பிறப்​பிக்க வேண்​டும் எனவும் மாநில அரசு ப்ளீடர் வாயிலாக அரசுக்கு அறிவுறுத்​தி​யிருந்​தது.

எனவே இனி உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கு​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள், வழக்​குத் தொடர்பான ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடமே சான்றொப்பம் பெற வேண்​டும். அவ்வாறு சான்​றொப்ப​மிடும் அரசு வழக்​கறிஞர்கள் சம்பந்​தப்​பட்ட வழக்​கு​களில் ஆஜராகும் வழக்​கறிஞர்​களாக இருக்கக் கூடாது.

முத்திரைகள்: மேலும் சான்​றொப்ப​மிடும் அரசு வழக்​கறிஞர்கள் தங்களது கையெழுத்​துடன், அவர்​களது பெயர், முத்​திரை, பதிவு எண், பதிவு செய்துள்ள பார் கவுன்​சில், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்​டும். எனவே இதற்கு தேவையான ஏற்​பாடுகளை உயர் நீ​தி​மன்ற ​மாநில அரசு ப்​ளீடர், ​மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் உள்​ளிட்​டோர் மேற்கொள்ள வேண்​டும்" என்று அ​தில் தெரி​வித்​துள்ளார்​.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+