இந்துக்களை பிறப்பால் தரம் பிரிக்கும் சனாதனம்.. ஐயரே சொல்லிட்டாரே! பரபரப்பை பற்ற வைத்த ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: உதயநிதி பேச்சை தொடர்ந்து சனாதனா தர்ம விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அதுகுறித்து பதிவிட்டு உள்ளார்.
அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "பரபரப்பை உண்டாக்கியிருக்கிற இந்த 'சனாதனம்' விவாதப் பொருளைக் குறித்து நானும் ஒரு சிறு ஆய்வு செய்தேன், அந்தக் கோட்பாடு என்னவென்பதை விளங்கிக்கொள்ள. இது மதத்தோடு மட்டும் இருக்கவேண்டியதா அல்லது சமூகமே பொதுவாக விவாதிக்க வேண்டியதா என்பதைத் தெரிந்துகொள்ள. அடிப்படை சமஸ்கிருத நூலின் சில மொழிபெயர்ப்புகள் இங்லிஷிலும், தமிழிலும் உள்ளன.

இதைப் பொறுப்பாகப் படிப்பவர் பிராமணரும், திராவிடக் கட்சியினர் மட்டுமே என்பதையும் தெரிந்துகொண்டேன், ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
SANATANA DHARMA
AN ADVANCED TEXT BOOKOF HINDU RELIGION AND ETHICS
PUBLISHED BY THE BOARD OP TRUSTEES
CENTRAL HINDU COLLEGE
BENARES
1904
என்கிற பல்கலைக்கழகப் பாடப்புத்தகம் எளிமையான இங்லிஷில் அந்தக் காலக் கோனார் தமிழ் உரை போல விளக்குகிறது.
"THE BASIS OF SANATANA DHARMA. The Shrutih, consisting of the FourVedas is the final authority in the Aryan Religion, and these four Vedas form in their entirety THE VEDA, THE PERFECT KNOWLEDGE, revealed by Brahma, seen by the Rishis, and clothed in words by Them for the benefit of the Aryan peoples." என்கிற முன்னுரையுடன் தொடங்குகிற இந்தப் புத்தகம் எட்டாவது அத்தியாயத்தில் விவகாரமான அந்தத் தலைப்புக்கு வருகிறது.
CHAPTER VIII - THE FOUR CASTES, 'வர்ணாசிரமம்' என்கிற அந்த நால்வகை மனிதரின் பிறப்பையும், கடமையையும், பொறுப்புகளையும் விளக்குகிறது. அவர்களுடைய எல்லையையும் வரையறுக்கிறது. எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு ஐயரிடமும் இதைக்குறித்து விளக்கம் கேட்டேன். எண்பதைக் கடந்தவர். வேதங்களை ஐயமறக் கற்றறிந்தவர். பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், ஆனாலும் முற்போக்கு சிந்தனையுள்ளவர், சின்ன வட்டங்களுக்குள் சுருங்கிப் போகாதவர்.

"சனாதன தர்மம் என்பது வாழ்வியல் முறையை நுணுக்கமாக போதிக்கும் அற்புதமான அறநெறி நூல். ஆனால், இந்த அரசியல்வாதிகள் எதிர்க்கிற செய்திகளும் அதிலுண்டு என்பதுதான் உண்மை. சிலர் அதை மறைக்க முயல்கிறார்கள், சிலர் அதை நியாயப்படுத்துகிறார்கள், பலர் இப்படி ஒன்று இருப்பதையே அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்".
"இக்கோட்பாடுகளை அறிந்து, உணர்ந்து, பின்பற்றி வாழ்பவனே மெய்யான ஆரியன் என்பதுதான் இந்நூலின் அடிப்படை" என்றார். "இது இந்துக்களின் வேத நூல் என்று சொல்ல முற்படுகிறார்கள். ஆனால் அந்த இந்துக்களையே பிறப்பால் தரம் பிரித்து வைத்துவிட்டு, நீயும் நானும் இந்து என்றால் அவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?" என்று முடித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications