Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் ராகு காலத்தில் திருமணம் செய்தேன்" சிங்கக் குட்டி போல 2 மகன்கள் இருக்காங்க.. அமைச்சர் எ.வ.வேலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாலை நேரத்தில் ராகு காலத்தில் தான் எனது திருமணம் நடைபெற்றது. எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா என்ன? சிங்கக் குட்டி போல இரண்டு ஆண் குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள் என்று 20 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பிறகு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எ.வ.வேலு கூறியதாவது:- திருமண அழைப்பிதழில் சொல்லப்பட்டு இருந்தபடி காலை 8 மணிக்கு இந்த திருமணம் நடக்கவில்லை. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

My marriage held during Rahu Kalam Minister E V Velu says

அதன்பிறகு தான் இங்கே வந்துள்ளேன். காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் இந்த திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தினார். ஆனால் அப்படி திருமணம் நடைபெறவில்லை. அந்த வகையில் பார்த்தால் பெரியார், அண்ணா, கருணாநிதி நேசித்த பகுத்தறிவு திருமணம்; சுயமரியாதை திருமணம் மிக சரியாக நடந்துள்ளது. சுயமரியாதை, பகுத்தறிவு திருமணத்திற்கு கால நேரம் கிடையாது.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணமக்களுக்கு நான் ஒரு தைரியத்தை சொல்லியாக வேண்டும். சரியான நேரத்தில் இன்றி கால தாமதம் ஆகி திருமணம் செய்கிறோம். எனவே, திருமண வீட்டினரின் அச்சத்தை போக்க நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் சுயமரியாதைக்காரன். நான் பகுத்தறிவு திருமணத்தை செய்து கொண்டேன். மாலை நேரத்தில் ராகு காலத்தில் தான் எனது திருமணம் நடைபெற்றது. எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா என்ன? சிங்கக் குட்டி போல இரண்டு ஆண் குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள்.

ஒரு மகன் என்ஜினியரிங் படித்து விட்டு எங்களின் கல்வி நிறுவனங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். உழைக்கிற உழைப்புதான் மனித வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வருவதற்கான உந்து சக்தியாக இருக்கும். புறவாழ்க்கை குறித்து ஆண்கள் முடிவு எடுக்க வேண்டும். அக வாழ்க்கை எனப்படும் குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். பெண்கள் பேச்சை கேட்டால்தான் குடும்பம் நன்றாக இருக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+