மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா : 25ல் தேரோட்டம் - 26ல் அறுபத்து மூவர் விழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25ஆம் தேதியும் அறுபத்து மூவர் விழா 26ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று போற்றப்படும் பெருமைக்கு உரியது மயிலாப்பூர். இங்கு ஏராளமான சிவ ஆலயங்கள் உள்ளன. மாதந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் மயிலாப்பூர். மயிலை நகரத்திற்கு சிகரம் வைத்தாற்போல் இருக்கும் சிவ ஆலயம் கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முன்தினம் கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. கோலவிழியம்மன்கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வரிசை எடுத்து வரப்பட்டது.பின், கோலவிழியம்மனுக்கு பொங்கல்வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கபாலீஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி பெருவிழாவிற்கான பத்திரிகை, கோலவிழியம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

கபாலீஸ்வரர் கற்பகாம்பாள்
அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான்.

பங்குனிப்பெருவிழா
இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலை மாடவீதிகளில் தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 25ஆம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருள்வார். காலை 8.45 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் நடைபெறும்.

63 நாயன்மார்கள்
26ஆம் தேதி காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை, வெள்ளி விமானத்தில் இறைவன், அறுப்பத்து மூன்று நாயன்மார்களுடன் திரு காட்சி அருளும் அறுபத்து மூவர் திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.

பங்குனி உத்திர திருக்கல்யாணம்
28ஆம் தேதி புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு நடக்கிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 29ஆம் தேதி பந்தம் பறி விழாவும் நடைபெற உள்ளன. 30ஆம் தேதி விழா நிறைவு திருமுழுக்கு நடைபெறுகிறது.

சாமி வீதி உலா
பங்குனி பெருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வெள்ளி மூஷிக வாகனம், நாகம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாமி தரிசனம்
கொரோனா காலமாக இருப்பதால் கடந்த ஆண்டு திருவிழா ரத்து செய்ப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பக்தர்கள் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை http://www.youtube. com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற யூடியூப் சேனலில் பாதுகாப்பாக பார்க்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications