நான் முதல்வன் திட்டத்தில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி! பதிவு செய்ய அக்.25 கடைசி நாள்
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய கடைசி நாள் வரும் அக்டோபர் 25 ஆகும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் இது போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு அதற்கான தகுதிகள் அளித்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இதற்கு நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் முதல்வன் திட்டத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜெர்மன் மொழி ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது என்றால், ஜெர்மனி நாட்டில் பல்வேறு துறைகளில் 1.7 மில்லியன் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள். எனவே வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக அங்கு செவிலியர் பணக்கான காலிப்பணியிடங்கள் 35 ஆயிரம் வரை உள்ளது. மேலும் ஜெர்மனியில் அடிப்படை ஊதியமே 2600 - 3400 யூரோ (இந்திய மதிப்பில் 2.36 லட்சம் முதல் 3.09 லட்சம் வரை ஆகும்). ஜெர்மனியில் செவிலிய உதவியாளர்கள், கேர் கிவ்வர்ஸ் ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
இதற்கான தகுதியானது பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு ஓராண்டுக்கு ஏதாவது ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கு 8 மாதத்திற்கான பி2 பிரொஃபிசியன்சி எனும் கோர்ஸ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஜெர்மனியில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா:
- வேலைவாய்ப்பின்மை காப்பீட்டுடன் வேலைக்கு பாதுகாப்பு
- தாய், தந்தை இருவருக்குமே மகப்பேறு விடுமுறை
- பதிவு செய்யப்பட்ட செவிலியராகிவிட்டால் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி
- மருத்துவ காப்பீடு
- மாதம் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை
- ஜெர்மனியில் பணியாற்றும் அனைவரது குழந்தைகளுக்கும் கல்லூரி வரை இலவச கல்வி
ஆகிய சலுகைகள் கிடைக்கும்.
இவையெல்லாம் கிடைக்க ஜெர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு வரும் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பாடங்கள் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் தொடங்கும்.
வாரத்தில் 5 நாட்கள் என ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் நேரில் வந்துதான் பயிற்சி பெற வேண்டும். ஆன்லைனில் பயிற்சி பெற முடியாது. அது போல் பயிற்சி பெற்றதும் ஜெர்மனியில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினிஷிங் பள்ளி என்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தந்த துறைகளுக்கான பயிற்சிகளை வழங்கி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் ஒரு பள்ளியாகும். துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் உலக தரத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு உடனடி வேலைவாய்ப்புகள் உண்டாக்கி தரப்படுகிறது. அதற்கான சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications