போற இடமெல்லாம் அராஜகம், கொலை மிரட்டல்.. குவிந்த புகார்கள்.. நாடோடி பழங்குடியின பெண் அஸ்வினி கைது
சென்னை: மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த சக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.

அப்போது அவர் கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் அவரே புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த கோயிலுக்கு சென்ற அமைச்சர் பிகே சேகர் பாபு அந்த பெண்ணுடனும் மற்ற நரிக்குறவ சமூகத்தினருடனும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கும் சென்று அவரை திக்குமுக்காட வைத்தார். இந்த நிலையில் நரிக்குறவ பெண் அஸ்வினி மீது புகார்கள் எழுந்தன.
அதாவது தான் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர் என கூறி மாமல்லபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு டிபன் கடைக்கு சென்று ரூ 10 க்கு சப்பாத்தி, பரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும் கொடுக்க முடியாது என கூறிய உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. உணவு சரியில்லை என்றால் முதல்வரிடம் சொல்லிவிடுவதாகவும் தான் சொன்னால் அதிகாரிகள் உடனே வந்துவிடுவார்கள் என்றும் மிரட்டினாராம். அது போல் கிழக்கு ராஜ வீதியில் உள்ள மருந்து கடையிலும் மருந்து சரியில்லை, உன் கடையை காலி செய்கிறேன் என அவர்களுடன் தகராறில் அஸ்வினி ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளதாக மருந்து கடை உரிமையாளர் கூறுகிறார்.
மேலும் அதே பகுதியில் ஒரு பேக்கரி கடையில் கேக் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் போன போது உரிமையாளர் காசு கேட்டதற்கு கேக் நல்லாவே இல்லை என கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதே போல் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையிலும் டீ சரியில்லை என கூறி காசு கொடுக்காமல் அஸ்வினி அராஜகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வரின் பெயரை கூறி அஸ்வினி அராஜகம் செய்வதாக வியாபாரிகள் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அஸ்வினி கூறுகையில் எங்களை தீண்டதகாதவர்களாகவே பார்க்கிறார்கள். நாங்கள் சாப்பிட்ட தட்டை கழுவி கொடுக்க சொல்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் சாப்பிட்ட தட்டை ஹோட்டல்காரர்களே கழுவுகிறார்கள். இதை நான் தட்டி கேட்டேன். அதற்கு உன் வீட்டில் சாப்பிட்டிருந்தாலும் நாங்கள் உங்களை ஒதுக்கித்தான் வைப்போம் என கூறுவதாக அஸ்வினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. அங்கு நாடோடி பழங்குடியின சமூகத்தினர் ஊசிமணி, பாசிமணி விற்று வருகிறார்கள். அவ்வாறு விற்பனை செய்த போது நந்தினி என்ற பெண்ணுடன் அஸ்வினி தகராறு செய்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியபோது தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கையில் கிழித்ததாக புகார் அளித்துள்ளார். நந்தினியின் புகாரின் பேரில் அஸ்வினியை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அஸ்வினியிடம் கேட்ட போது தனது வீட்டிற்கு முதல்வர் வந்து சாப்பிட்டுவிட்டு சென்றதால் நான் பிரபலமாகிவிட்டேன் என்ற காழ்ப்புணர்ச்சியால் என் மீது இப்படியெல்லாம் பழிச் சுமத்துகிறார்கள் என அஸ்வினி தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications