அரசியலாக்காதீங்க.. தேசிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும்.. ஆளுனர் ஆர்என் ரவி பரபர பேச்சு!
சென்னை: விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேசி உள்ளார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக்கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. ஆளுநர் ரவி இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து இன்று பேசினார். கருத்தரங்கில் தேசிய கல்விக்கொள்கை குறித்த சிறப்பம்சங்களை ஆளுனர் ஆர். என் ரவி எடுத்துரைத்தார்.
அதில், புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். புதிய கல்விக்கொள்கையை எல்லோரும் படிக்க வேண்டும்.

ஆர் என் ரவி பேச்சு
எல்லோரும் இதை படித்து, முக்கியமாக ஆட்சியாளர்கள் இதை படித்து உணர வேண்டும். அதன்பின் அதன் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும். விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது . நம்முடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது.

சிறப்பு என்ன?
இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு எடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமையும். தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக இரண்டு நாள் கருத்தரங்கு நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கில் கல்விக்கொள்கையின் சிறப்பம்சத்தை மக்களிடம் கொண்டு ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கல்விக்கொள்கை
அப்படிப்பட்ட புதிய கல்விக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. ஆனால் இப்போது ஒற்றுமைக்கு பதிலாக வேற்றுமையில் வேற்றுமையை பார்க்கும் போக்கு அதிகரித்து உக்ள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் சாராம்சம் புரியாமல் எதிர்க்க கூடாது.

அரசியல்
இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டு வரும் திட்டங்களின் சாராம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கு நலன் பயக்கும். 74 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் பெரிய மாற்றம் இல்லை. இது ஆங்கிலேயர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட கொள்கை.. இதில் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications