அரசியலாக்காதீங்க.. தேசிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும்.. ஆளுனர் ஆர்என் ரவி பரபர பேச்சு!
சென்னை: விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேசி உள்ளார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக்கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. ஆளுநர் ரவி இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து இன்று பேசினார். கருத்தரங்கில் தேசிய கல்விக்கொள்கை குறித்த சிறப்பம்சங்களை ஆளுனர் ஆர். என் ரவி எடுத்துரைத்தார்.
அதில், புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். புதிய கல்விக்கொள்கையை எல்லோரும் படிக்க வேண்டும்.

ஆர் என் ரவி பேச்சு
எல்லோரும் இதை படித்து, முக்கியமாக ஆட்சியாளர்கள் இதை படித்து உணர வேண்டும். அதன்பின் அதன் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும். விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது . நம்முடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது.

சிறப்பு என்ன?
இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு எடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமையும். தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக இரண்டு நாள் கருத்தரங்கு நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கில் கல்விக்கொள்கையின் சிறப்பம்சத்தை மக்களிடம் கொண்டு ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கல்விக்கொள்கை
அப்படிப்பட்ட புதிய கல்விக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. ஆனால் இப்போது ஒற்றுமைக்கு பதிலாக வேற்றுமையில் வேற்றுமையை பார்க்கும் போக்கு அதிகரித்து உக்ள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் சாராம்சம் புரியாமல் எதிர்க்க கூடாது.

அரசியல்
இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டு வரும் திட்டங்களின் சாராம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கு நலன் பயக்கும். 74 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் பெரிய மாற்றம் இல்லை. இது ஆங்கிலேயர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட கொள்கை.. இதில் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications