உடனே வர முடியாது.. கூடுதல் அவகாசம் வேண்டும்.. வருமான வரித்துறை சம்மனுக்கு விஜய் அதிரடி பதில்!
வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
சென்னை: வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.வருமான வரித்துறை சோதனையை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மேலும் பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

என்ன அவகாசம்
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு முதலில் 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தோன்றி விளக்கம் அளிக்கலாம். சம்மனுக்கு மூன்று நாட்களில் பதில் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இந்த காலக்கெடு மாற்றப்பட்டது . இந்த சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

உடனே பதில்
உடனே பதில் அளிக்க வேண்டும். இன்றே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வர வேண்டும் என்று அவசர அவசரமாக சம்மன் அனுப்பி உள்ளது. வருமான வரித்துறை இப்படி திடீர் என்று முடிவை ஏன் மாற்றியது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேபோல் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அங்கிருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

சம்மன் எப்படி
அப்படி இருக்கும் போது ஏன் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறார். உடனடியாக விசாரணைக்கு வர முடியாது. கூடுதல் அவகாசம் தேவை. குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு இருக்கிறது.

வழங்கப்பட வாய்ப்பில்லை
ஆனால் இதற்கு வருமான வரித்துறை சார்பாக அளிக்கப்பட்ட பதில் குறித்த தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் விஜய்க்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். கூடுதலாக நாளை வரை அவகாசம் தர மட்டுமே வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். நெய்வேலியில் இதன் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications