நீட் தேர்வு எழுத போறீங்களா? மறந்தும் இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க மாணவர்களே! ரெம்ப கவனமா இருக்கணும்!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் 4ஆம் தேதி நீட் தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதும் 23 லட்சத்திற்கும் அதிகமானோரும், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது நாடு முழுவதும் இந்த தேர்வை 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 41 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என nta கூறியுள்ளது.
மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெறுகிறது.
நீட் தேர்வு தொடர்பாக முறைகேடுகளை தடுக்க மாணவ மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹால் டிக்கெட், எழுதுகோல் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணியக்கூடாது.
உயரம் குறைந்த ஹில்ஸ் இல்லாத செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நண்பகல் ஒரு மணி முதலே கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications