டச் பண்ண முடியாது.. எங்களை அலட்சியப்படுத்தாதீங்க.. வள்ளுவர்கோட்டத்தில் சீறிய உதயநிதி.. கவனித்த பாஜக
சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுகவின் அடுத்த அதிரடி ஆரம்பமாகி உள்ளது. அந்தவகையில், திமுக இளைஞரணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கம் ஆரம்பமாக உள்ளது.
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், திமுக இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது.. அதனால்தான், இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க போவதாக 2 நாட்களுக்கு முன்பே அறிவித்தது.
இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். இதற்கு பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் இதனை உறுதி செய்திருந்தார்.

இளைஞர் அணி: "தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம்" என்று அறிவித்திருந்தார்.
அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.. நிகழ்ச்சிக்கு மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி., மருத்துவர் அணி தலைவர் கனிமொழி என்விஎன் சோமு எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.. மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.மோகன் வரவேற்றார்.

உதயநிதி பேச்சு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: "நீட் விலக்குதான் எங்கள் இலக்கு என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்றார்கள். மருத்துவ கல்லூரிகளில் பணம் கொடுத்து சேருவது தடுக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் நீட் தேர்வில் முட்டை மதிப்பெண் எடுத்தாலும் பணம் கொடுத்து சேர முடியும் என்பதைதான் உருவாக்கி இருக்கிறார்கள்.
தமிழர்கள் பிரச்சனை: எல்லோரும் சேர்ந்து போராடுவோம் வாருங்கள்... கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள். முன்பு பாஜக கூட்டணியில் இருந்ததால் வரமுடியவில்லை. இப்போது வெளியே வந்துவிட்டீர்கள்.. தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள். இதை வெறும் திமுகவின் பிரச்சனை என்று யாரும் கருத வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை.. எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும் பாஜகவால் தமிழர்களின் இதயத்தை தொட முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications