நீட் ஒரு சமூக அநீதி.. அதை முதலில் அழிப்போம்.. உயிர்களை அல்ல.. வைரமுத்து ஆவேசம்
நீட் என்பது தேர்வுமல்ல தற்கொலை என்பது தீர்வுமல்ல என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நீட் என்பது சமூக அநீதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அழிக்க வேண்டியது அநீதியைத்தான் உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு குறித்த பயத்தினால் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என்று பதிவிட்டுள்ளதோடு உயிரை அழிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓ!
— வைரமுத்து (@Vairamuthu) September 12, 2020
மாணவ மகன்களே! மகள்களே!
நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.
பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.
அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.
நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.#NEET #BanNEET
ஓ! மாணவ மகன்களே! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல;தற்கொலை என்பது தீர்வுமல்ல. பிறக்கும் யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை. அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். நீங்கள் வாழப் பிறந்தவர்கள் என்று கூறி #SayNoToNEET #BanNEET என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு குறித்த அச்சத்தினால் கடந்த வாரம் அரியலூரில் விக்னேஷ் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு மாணவியின் உயிர் பறிபோயிருக்கிறது. நீட் பற்றிய அச்சத்தை விட்டு தைரியமாக தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாகும்.
Recommended Video
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications