2019 நீட் தேர்வுக்கான பதிவு தொடக்கத்திலேயே கிளம்பியது பிரச்னை... சர்வர் கோளாறால் சிக்கல்!
சென்னை : 2019 நீட் தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே பதிவு செய்ய முயற்சித்த மாணவர்களுக்கு சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கப்படுகிறது. 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வை சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனிடையே 11 மணி முதலே இணையதளத்தில் பதிவு செய்ய முயன்றும் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சர்வர் கோளாறு காரணமாக மாணவர்களால் பதிவு செய்ய முடியவில்லை. நீட் தேர்வு என்றாலே அடுத்தடுத்து சர்ச்சை என்ற நிலையில் ஆரம்பமே இப்படியா என்று மாணவர்களின் பெற்றோர் முகம் சுளித்தனர்.
எனினும் சர்வர் பிரச்னை சரிசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்பதால் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் மாணவர்கள் தேர்வில் தோன்றுவதற்கான ஒப்புதல் கடிதங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2019, மே 6ல் நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :
10ம் வகுப்பு மதிப்பெண் அட்டை
12ம் வகுப்பு மதிப்பெண் அட்டை
மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மாணவரின் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து
அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை)
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications