மாணவி அனிதா நினைவு தினம்: நீட்டை ஒழித்து கட்டுவோம்.. அந்த நாள் நிச்சயம் வரும் - அமைச்சர் உதயநிதி
சென்னை: நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம் என்று மாணவி அனிதா நினைவு நாளை நினைவு கூர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நீட் தேர்வினால் தமிழக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு சிதைக்கப்படுவதாகவும், இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க வேண்டும் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரசாரத்தின் போது நீட்டை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியதாததால் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்வது தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 21 ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணா விரத அறப்போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தரும் வரை ஓயமாட்டேன் எனக் கூறியிருந்தார். அதேபோல், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஒரு உதயநிதி போராடினால் போதாது இளைஞரணியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் உதயநிதியாக மாறி போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது அண்மையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற போது பலரும் நீங்கள் பங்கேற்றால் உங்கள் பதவிக்கு சிக்கல் வரும் எனக் கூறியதாகவும் ஆனால் பதவியை பற்றி தாம் பொருட்படுத்தவே இல்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நாளான இன்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்த தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
மேலும் நீட் தேர்வை நிச்சயம் ஒழித்து கட்டுவோம் என சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும்.
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications