மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ.. மழையில் கவிபாடும் சென்னைவாசிகள்
சென்னை: சென்னையில் கோடை மழை பூமியை நனைத்ததால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர், முகப்பேர், அண்ணாநகர், விருகம்பாக்கம், செங்குன்றம், நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதுகுறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள கருத்துகளில் சில உங்களுக்காக:-
அன்பே என் அன்பே
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
#Chennairain
தெற்கு
வடக்கிலிருந்து தெற்கிற்கு செல்லும் மேகக் கூட்டங்கள். சென்னை நகரை விட புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது.
குளிர்ந்த சூழல்
சென்னையில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ந்தார்கள்.
ஊட்டி
மதுரவாயலில் 20 நிமிடங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் சென்னையே ஊட்டி போல் மாறியுள்ளது.
மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் கோடை மழை பெய்தது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்தது.