மழை தொடங்கினா காதலி போல் மகிழ்ச்சி.. தொடர்ந்தா மனைவி போல் தொல்லை.. நீடிச்சா மருமகள்.. நெட்டிசன்கள்
Recommended Video
சென்னை: மழை தொடங்கினால் காதலி போல் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தொடர்ந்தால் மனைவி போல் தொல்லையாய் உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் மழையே பெய்யவில்லை. இதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து கமென்ட் அடித்துள்ளனர்.
பெரம்பலூரில் கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு.. தனித்தீவான 10 கிராமங்கள்
|
மருமகள்
*தொடங்கும்போது காதலியை போல் மகிழ்ச்சியாய் தெரிந்த மழை...*
*தொடர்ந்து கொண்டே இருந்தால் மனைவியைப் போல் தொல்லையாய் தெரிகிறது...*
*இன்னும் நீடித்தால் மருமகளைப் போல் வீட்டுக்குள் புகுந்து நம்மை வெளியேற்றிவிடும் என்றே தோன்றுகிறது...
|
செவ்வாயும் மழை
திங்களையடுத்து
செவ்வாயும் #மழை
தொடருமே யானால்...
2015 போல்
மறுபடியும் #சென்னை
மிதக்க போவதை
தடுக்கமுடியாது
யாராலும் !
மேகப் பிளவு
ஒன்றுக்கான
சாத்தியம்
உண்டாகலாம் !
|
மழை நின்னுடும்
எப்ப நீ ரெட் அலர்ட் கொடுத்தியோ அப்பவே தெரியும் மழை நின்னுடும்னு
|
பாபநாசம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
|
மழை பெய்யாது
எவ்வளவோ அறிவியல் வளர்ந்து என்னென்னமோ கண்டு பிடிச்சாலும், ஸ்கூலுக்கு லீவ் விட்டா மழை பெய்யாதுங்குறத கண்டுபிடிக்க முடியாதது என்ன டிசைனோ?
|
ஜீன்ஸ் காய ஒரு யுகம் தேவை
சனிக்கிழமை மழையில் நனைந்து துணிகள், இன்னும் அதே ஈரத்தோட இருக்கு
ஒரு சட்டை காய ஒரு வாரம்
ஒரு பேன்ட் காய 2 வாரம்
ஜீன்ஸ் பேண்ட் காய ஒரு யுகமே தேவைப்படுது