ரஜினி சீரியஸாக பேசும் போது.. அடுத்த படத்துக்குன்னு சொல்லிட்டு கிளம்புங்க.. அதிர வைத்த பெரியவர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ரஜினி சீரியஸாக பேசிக்கொண்டிருந்த போது, பக்கத்தில் இருந்த பெரியவர், 'அடுத்த படத்துக்குனு சொல்லிட்டு கெளம்புங்க' என்று கூறுவார். இதை மட்டும் கட் செய்து நெட்டிசன் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு படம் வெளியான பின்னர் இமயலைக்கு போவது வழக்கம். வழக்கமாக இமயமலைக்கு மட்டும் தான் சென்று வருவார். இந்த முறை 'ஜெயிலர்' படம் வெளியான பிறகு இமயமலைக்கு சென்றார். அதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் சென்று வந்தார். அயோத்தியில் ராமர் கோயிலுக்கு சென்றவர், லக்னோவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தையும் சந்தித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' சிறப்புக் காட்சியை கண்டு ரசித்தார். அத்துடன் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சி தலைவரான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவை சந்தித்ததார். அத்தடன் உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ராஜா பைய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கை (53) சந்தித்தார். இவர் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார். டிஎஸ்பியை கொன்றதாக கொலை குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. ராஜா பைய்யாவை ரஜினி சந்தித்தது ஏன் என்பது பெரும் விவாதமாக ஊடகங்களில் பேசப்படுகிறது.
இது ஒருபுறம் எனில் நடிகர் ரஜினிகாந்த் தனது பயணத்தின் போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையானது. யோகியின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதம் ஆனது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஏனெனில் காலா படத்தின் போது, அம்மா, அப்பா, குரு, பெரியர்கள் காலில் விழலாம். பணம், பதவி, அதிகாரம் உள்ளவர்களின் காலில் விழக்கூடாது என்று ரஜினி தான் பேசியிருப்பார். அந்த வீடியோவை சுட்டிக்காட்டியே ரஜினியை கடுமையாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
பக்கத்து பெருசு...
— James Stanly (@JamesStanly) August 21, 2023
அடுத்த படத்துக்குனு சொல்லிட்டு கெளம்புங்க..😂😂 pic.twitter.com/jhSQ4kAMZg
இதனிடையே, நேற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, "நான்கு வருடங்கள் கழித்து இமயமலை சென்றுவந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பயணம் மிக நன்றாக அமைந்திருந்தது ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு என் நன்றிகளைதெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய படக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அப்போது ரஜினியிடம் யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, , "முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே. இதை தவிர வேறு ஒன்றும் அந்த சந்திப்பில் கிடையாது. சந்நியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதை தான் செய்தேன்" என்றார். ரஜினிகாந்த் அப்போது சீரியஸாக பேசி பதில் அளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெரியவர், அடுத்த படத்துக்குனு சொல்லிட்டு கெளம்புங்க என்று கூறினார். அதை மட்டும் கட் செய்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அந்த பெரியவர் வேறு யாரும் இல்லை, ஒரு பிரபல பழம்பெரும் ஒரு கட்சியின் டிவி சேனலின் நிருபர்தான். விஜயகாந்த்திடம் ஏர்போர்ட்டில் வாக்குவாதம் செய்ததால் தேமுதிக தொண்டர்களின் கோபத்திற்கு ஆளானவர் இவர். இப்போது ரஜினியை நைஸாக நிருபர்களின் கேள்விக்கணைகளிடமிருந்து தப்புவிக்க இப்படி ஐடியா கொடுத்திருப்பார் போல. ஆனால் ரஜினி காதில் அவர் சொன்னது விழவில்லை, அல்லது கவனிக்க வேண்டாம் என விட்டுவிட்டார். ரஜினி, பிற நிருபர்களின் கேள்விகளை உன்னிப்பாக கவனித்து பதில் அளிப்பதில் கவனமாக இருந்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications