தமிழிசையின் நீட் தற்கொலை தொடர்பான ட்வீட்- கோபத்தை மொத்தமாக காட்டிய நெட்டிசன்கள்!
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சிக்க வேண்டுமே தவிர தற்கொலை தீர்வு ஆகாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் மத்திய பாஜக அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
நீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி!
இதனிடையே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்...நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டு போகாமல் மறு முயற்சி செய்து தோல்வியை வெற்றிக்கு படிகட்டாக்க வேண்டும்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்...நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டு போகாமல் மறு முயற்சி செய்து தோல்வியை வெற்றிக்கு படிகட்டாக்க வேண்டும்.தற்கொலை போன்ற முடிவுகள் தீர்வாகாது என்பதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறேன். pic.twitter.com/iRXcQXPMRo
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) June 5, 2019
தற்கொலை போன்ற முடிவுகள் தீர்வாகாது என்பதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறேன்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டரில் பதிவுக்கு மிகக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக மாணவர்களை படுகொலை செய்துவிட்டீர்கள்; அவர்களை கொலை செய்துவிட்டு தற்கொலை என பேசாதீர்கள் என தமிழிசையின் ட்வீட்டில் பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக தங்களது கடும் கோபத்தை ஒவ்வொருவரும் ஆவேசத்துடன் தமிழிசையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.