அலுவலக மொழியாக இந்தி- கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்!
சென்னை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அலுவலக மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என அனுப்பிய சுற்றறிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பதில்களும் இந்தியிலேயே இருக்க வேண்டும். அனைத்து அலுவலக்ப் பணிகளும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் அனைத்து குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகின்றனர். இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களையும், இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள், தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின்வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக்கும்போதும், அவர்கள்இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதை சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது என கடுமையாக சாடி இருந்தார்.

இதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தி திணிப்புக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு- "தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் மனதார மன்னிப்பு கோருகிறோம்" என்று அறிவிப்பு. அலுவல் மொழி விதிகளில் தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications