பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி
அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது
Recommended Video
சென்னை: அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதலே இந்த சீருடை அறிமுகமாகிறது.
சமீப காலமாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே நவீன சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதன்படி கணினி வகுப்புகள், ஸ்மார்ட் வகுப்புகள், கியூ-ஆர் குறியீடு புத்தகங்கள் என்று பல புதுமையான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. யூனிபார்மிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என்று செங்கோட்டையன் சென்ற வருடமே அறிவித்திருந்தார்.
அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் தனித்தனி யூனிபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி யூனிபார்மும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி யூனிபார்மும் இந்த கல்வி ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பச்சை நிறத்தில் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், ஸ்கர்ட்-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டை, பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் யூனிபார்ம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications