புத்தாண்டு நள்ளிரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உடனே கைது - காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டினால் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சென்னை: புத்தாண்டு தினத்தில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னையில் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக குடிபோதையில் வாகனங்களில் சென்று ரகளையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். அதே நேரத்தில் குடும்பத்துடன் தேவாலயங்களுக்கு செல்பவர்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சென்னை சாலைகளில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். சென்னையில் புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
@chennaipolice_ officers on night duty. pic.twitter.com/VKxAbONMUD
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) December 25, 2020
போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில், இணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், பாண்டியன், லட்சுமி, துணை கமிஷனர்கள் செந்தில்குமார், அசோக்குமார், குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலைகளில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனிடையே சென்னை சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக வாகனங்களில் சென்ற 175 பேரும், அபாயகரமாக வாகனங்களில் சென்ற 50 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications