பயங்கரவாத தொடர்பு.. 5 பேரை தனி இடத்தில் வைத்து துருவித் துருவி விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள்!
சென்னை : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரை விசாரிக்க என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அவர்களை தனி இடத்தில் வைத்து, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாகவும், ஆட்களை அனுப்பியதாகவும் கூறி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 6 இடங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, சென்னையைச் சேர்ந்த அப்துல் ரசாக் (47), மதுரை முகமது யூசுப் (35), முகமது அப்பாஸ் (45), திண்டுக்கல் கைசர்(45), தேனி சாதிக் அலி (39) ஆகியோரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டதும், ஆயுதங்களைக் கையாள்வது குறித்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு குறித்து சில டிஜிட்டல் ஆவணங்களும் சிக்கின.
இதையடுத்து, இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். மேலும், வரும் 6ஆம் தேதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 5 பேரையும் தனி இடத்தில் வைத்து, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications