காலையிலேயே இறங்கிய என்ஐஏ.. சென்னை உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை! மன்னார்குடியில் ஒருவர் கைது
சென்னை: சென்னை, மன்னார்குடி உள்பட 6 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் மன்னார்குடியில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இந்ததாக கூறப்படுகிறது.
காலையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக என்ஐஏ சோதனை நடந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் பேரிலும், ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் படி, சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்புடன் சென்ற என்ஐஏ அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளில் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, மன்னார்குடி என 6 இடங்களில் இந்த சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதற்கு ஆள் சேர்த்ததாகவும் கிடைத்த தகவலின் பேரிலும், ஏற்கனவே கிடைத்திருந்த தகவலின் அடிப்படையிலும் தான் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன்னார்குடியில் ஒரு வீட்டில் நடந்த சோதனையில், பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாபா பக்ருதீன் வீட்டில் சுமார் 5 மணி நேரம் என் ஐஏ சோதனை நடந்தது. இதில் அவரது வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது
இது தொடர்பாக பாபா பக்ருதீனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவடைந்த பிறகே, இது தொடர்பான முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications