சென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது.. நிதி ஆயோக்கில் பகீர்
Recommended Video
சென்னை: சென்னை, டெல்லி, பெங்களூர் உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் இருக்காது என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் தண்ணீருக்கான தேடலில் இருக்கிறது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கடும் வறட்சி நிலவுகிறது.

வாடிக்கை
இதனால் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்சினையை போக்க ஒரே வழி நதி நீர் இணைப்பு என்கிறார்கள். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை குறை சொல்வதும் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியை குறை சொல்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

அறிக்கை
இந்தியாவே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில் நிதி ஆயோக் ஒரு பகீர் தகவலை அளித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

40 சதவீதம்
டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது. இந்த விவகாரத்தால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர். மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கும் குடிநீர் வசதி இருக்காது. எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும்.

மெட்ரோ நகரங்கள்
சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது. ஆனால் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும் மழையும் அதிகமாக இருக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்போதே தண்ணீர் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை 21 நகர மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications