“ஒரு கேள்வி கேக்க சொன்னா 9 கேள்வி”.. சட்டசபையில் எவ வேலு பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த அப்பாவு!
சென்னை: "ஒரு கேள்விக்கு பதிலாக ஒன்பது கேள்வி கேட்கிறார்கள்" என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு சிரித்தபடி பேசியுள்ளார்.
ரயில்வே பாலம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். அதேபோல, பாமக எம்.எல்.ஏ அருள் கேள்விக்கும் அமைச்சர் வேலு பதில் அளித்தார். அப்போது எவ வேலு பேச்சால், சபாநாயகர் அப்பாவு உள்பட உறுப்பினர்கள் அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் எழுந்து,"கே.ஆர் தோப்பு முதல் முத்துநாயக்கன்பட்டி வரை சாலை குறுகலாக உள்ளது. சேலம் பள்ளபட்டி சூரமங்கலம் சாலையில் பாலத்தை செப்பனிட வேண்டும். இரண்டு ரவுண்டாக்கள் அமைக்க வேண்டும். சேலம் ஐந்து ரோட்டில் மழைநீர் வடிகால் அமைத்துத் தரவேண்டும்" என வரிசையாக கோரிக்கைகளை அடுக்கினார்.
இதையடுத்து அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு,"ஒரு கேள்விக்கு பதிலாக ஒன்பது கேள்வி கேட்கிறார்கள். சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது" என பாமக எம்.எல்.ஏ.அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
மேலும் பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தேனி - மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அதற்கு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைக்கப்படுமா என அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "இந்த ஆண்டே இது தொடர்பாக ஆய்வு நடத்தி, புதிய கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்." எனத் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications