தானே புயலின் வேகத்தை கூட நிவர் தாண்டும்- எப்பவும் எதுவும் நடக்கும்.. வெதர்மேன் "ஸ்பெஷல்" வார்னிங்!
சென்னை: நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தை இன்று அல்லது நாளை நிவர் புயல் தாக்க உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து உள்ளது.
நிவர் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் புயல் தமிழகத்தில் சென்னை மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். டெல்டாவிற்கு கிழக்கு பகுதியிலும் இலங்கைக்கு மேலே வடகிழக்கு பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. காற்றின் வேகம் இங்கு ஏற்கனவே 100 கிமீரை நெருங்கிவிட்டது.

கணிப்பு
கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். நிவர் புயலை கணிப்பது கடினமாக இருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சி மையங்களின் கணிப்புப்படி இந்த புயல் காரைக்கால் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் 24 மணி நேரத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.

நிறைய மாறும்
கடைசி நேரத்தில் நிறைய மாறும். நிறைய கட்சித்தாவல்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த புயல் மொத்தமாக மேற்கு நோக்கி நகர்வதற்கு கொஞ்சம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா பகுதிகளை இந்த புயல் கண்டிப்பாக தாக்காது. டெல்டாவில் லேசான மழை பெய்யும் ஆனால் புயல் தாக்காது. இதனால் டெல்டா மக்கள் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை.

புதுச்சேரி
நிவர் புயல் பெரும்பாலும் பாண்டிச்சேரி சென்னை இடையே கரையை கடக்கும் . மஹாபலிபுரம் - கல்பாக்கம் இடையே எங்காவது கரையாக கடக்கலாம். இன்று இரவு அல்லது நாளை காலை இந்த புயல் கரையை கடக்கும். மஹாபலிபுரத்திற்கும் - சென்னைக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை.

சின்ன மாற்றம்
இந்த புயலில் சின்ன மாற்றம் ஏற்பட்டு லேசாக வழி மாறினால் கூட சென்னையில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலை தடுக்கும் வகையில் காற்று மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. இந்த புயல் அதிக வேகம் பெறும். தானே புயலின் வேகத்தில் (140 கிமீ) அல்லது அதற்கும் அதிகமான வேகத்திலும் கூட இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

வேகம்
இந்த புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 100 கிமீ வேகத்தில் கூட காற்றும் வீசும். 26ம் தேதி காலை அதிக காற்று வீசும் .

காற்று வீசும் வேகம்
140 கிமீ - பாண்டிச்சேரி - மரக்காணம்- மஹாபலிபுரம் (இன்று இரவில் இருந்து நாளை காலை வரை)
100 கிமீ- கடலூர் கடலோரம் (இன்று இரவு வரை)
100 கிமீ - சென்னை கடலோரம் (நாளை காலை வரை)
100 கிமீ - செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் (நாளை காலை வரை)
80-90 கிமீ- ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவள்ளூர் (நாளை மதியம் வரை) பகுதியில் காற்று வீடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications