"விரைவில் உருவாகும் புதிய புயல்?" சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.அந்தமான் கடல் பகுதியில் உருவான இந்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
Recommended Video
இதன் காரணமாக ஏற்கனவே, கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை புயலாக மாறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புதிய புயல் நாளை மறுநாள் வடமேற்கு திசையை நோக்கி, வட ஆந்திரா, ஒடிசா நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகச் சென்னை, கடலூர், எண்ணூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் தூத்துக்குடி, காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications