அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. அதிமுக கடும் அமளி! சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
சென்னை: கே என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய 3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழலுக்காக அமைச்சர் கே.என். நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக கடிதம் அளித்துள்ளது.

இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். விதி என் 72 ன் கீழ் சபாநாயகர் அனுமதி கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.
இதையடுத்து அதிமுக கொடுத்த கடிதம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம் எல் ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- "அதிமுக சார்பில் பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தராததை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை கால்வாய் சீரமைப்பு தொடர்பான கவனம் ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!











Click it and Unblock the Notifications