கொரோனாவால் உலகை விட்டு செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்.. சென்னை மாநகராட்சி
சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலிலிருந்து எந்தவொரு நோய்த் தொற்றும் பரவாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் துறை மருத்துவருக்கு கொரோனா ஏற்பட்டு அவர் நேற்று உயிரிழந்தார். அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய உடல் கொண்டு வரப்பட்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். அந்த வாகன டிரைவரையும் தாக்கினர்.
இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேரை கைது செய்தனர்.

துரதிருஷ்டம்
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் இவ்வுலகை விட்டு விடைபெற்று செல்வதென்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த தொற்றுநோயால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்க நேரிடுவது கடினமான ஒரு நிகழ்வாகும்.

வழிகாட்டுதல்
நாம் வாழும் இவ்வுலகில் அவர்களும் ஒரு பகுதியே. சக மனிதர்களாகிய அவர்களைத் தகுந்த மரியாதையுடன் இங்கிருந்து அனுப்பி வைப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். கோவிட் 19 காரணமாக இறக்கும் நபர்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு அளித்திருக்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தெளிவான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

கவனம்
சடலத்தை கவனமாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் கையாளவும் சரியான முறையில் தகனம் செய்யவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் உடல்களை கவனமாக தகனம் செய்ய எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுகிறது.

பாதுகாப்பு
இறந்த நபர்களின் சடலத்திலிருந்து எந்தவொரு நோய்ப் பரவலையும் பற்றி மக்கள் கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை. நாங்கள் அதனை பாதுகாப்பான முறையில் கையாளுகிறோம். இந்த விஷயத்தில் நம் சமூகத்திற்கான முழு பாதுகாப்பை உங்களுக்கு உறுதியளிக்கிறோம். நம் உலகத்திலிருந்து செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்! என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications