“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி
சென்னை: "என் மகனுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை; அவர் பரப்புரை செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை" என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் கருணாஸிடம் உங்கள் மகன் கென் உங்களுக்காக பரப்புரை செய்வாரா என்ற கேள்விக்கு கருணாஸ் பதில் அளித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளன. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், "2016 ஆம் ஆண்டு தேர்தலில் நான் இரட்டை இலை சின்னத்தில் நின்றதற்கு காரணம், அது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட சின்னம் என்பதால் தான். அந்த இரட்டை இலைக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஜெயலலிதாவுக்கானது. எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்கவில்லை. அவர் கும்பிட்டு வாங்கிய பதவி தான். ஓட்டுப் போட்டு எல்லாம் இபிஎஸ் ஜெயிக்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து பெருவாரியான வாக்குகள் கொண்ட என்னுடைய சமூகத்தை எடப்பாடி பழனிசாமி புறம்தள்ளி விட்டார்.
அதே சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்களை அவர் ஓரம் கட்டி அரசியலில் அடையாளம் அற்றவர்களாக மாற்றுவதற்கான முயற்சியை தொடர்ந்து அவர் செய்கிறார். மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறார் என்பதால் தான் அவரை விட்டு அப்போதே நான் வந்து விட்டேன். ஒரு காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் மனநிலையில் இல்லை. அப்போது அது இரட்டை இலை. இப்போது இது ஒத்த இலை. அதுவும் செத்த இலை. அதுவும் பாஜகவிடம் போய்விட்டது. அதை யாரும் மதிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
ரவுடி வேட்பாளர்களை இறக்கியிருப்பதாக அதிமுக வேட்பாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கருணாஸ், "அரசியல் சூழ்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமி என் மீது பொய் வழக்குகளைப் போட்டு ரவுடியாக சித்தரித்து விட்டார். ஆனால் ஒரிஜினல் ரவுடி இபிஎஸ் தான்" எனத் தெரிவித்தார்.
உங்கள் மகன் கென் கருணாஸ் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், "அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. கென் பிரச்சாரம் செய்து நான் ஜெயிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் ஏற்றுக்கொண்ட திமுக கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த கடந்த ஐந்தாண்டுகள் செய்த திட்டங்கள் சொல்லி வாக்கு கேட்பேன். இந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டம் போதும் நான் சிவகங்கையில் வெற்றி பெறுவதற்கு" எனத் தெரிவித்துள்ளார்.
-
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications